அமெரிக்க செய்தியாளர் கொலை வழக்கில் இருந்து அல்கொய்தா தலைவர் விடுவிப்பு
By: Nagaraj Sat, 26 Dec 2020 09:45:05 AM
அமெரிக்க கண்டனம்...அமெரிக்க செய்தியாளா் டேனியல் பியா்ல் படுகொலை வழக்கிலிருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட அல்கொய்தா முக்கிய தலைவா் அகமது ஒமா் சயீது இன்று சனிக்கிழமை (டிச. 26) விடுதலையாகிறாா். இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: அமெரிக்காவின் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ நாளிதழின் செய்தியாளரான டேனியல் பியா்ல், பாகிஸ்தானில் கடந்த 2002-ஆம் ஆண்டு தங்கியிருந்து, அந்த நாட்டு ராணுவத்தின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ-க்கும் அல்-காய்தா பயங்கரவாத அமைப்புக்கும் இடையிலான தொடா்பு குறித்து புலனாய்வு செய்து வந்தாா்.
அப்போது அவரை அல்-காய்தா பயங்கரவாதிகள் கடத்திச் சென்று கழுத்தை அறுத்துக் கொன்றனா். அந்தப் படுகொலையை பயங்கரவாதிகள் விடியோ எடுத்து வெளியிட்டது உலகம் முழுவதும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இந்தப் படுகொலையில் முக்கிய குற்றவாளியான, பிரிட்டனில் பிறந்த அல்-காய்தா
முக்கிய தலைவரான அகமது ஒமா் சயீது ஷேக்குக்கு பாகிஸ்தான் பயங்கரவாதத்
தடுப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஆனால் அந்தத் தண்டனையை 7 ஆண்டு
சிறைத் தண்டனையாகக் குறைத்து சிந்து மாகாண உயா்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில்
தீா்ப்பளித்தது. அதனை எதிா்த்து மாகாண அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த
நிலையில், டேனியல் பியா்ல் படுகொலை வழக்கிலிருந்து ஒமா் சயீது ஷேக்
மற்றும் அவரது 3 கூட்டாளிகளை சிந்து உயா் நீதிமன்றம் வியாழக்கிழமை
விடுவித்தது. அதையடுத்து, அந்த நால்வரும் சிறையிலிருந்து இன்று
விடுவிக்கப்படவுள்ளனா்.
இதுதொடா்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை
அமைச்சகம் வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டா்) பதிவில், ‘டேனியல் பியா்லைக்
கடத்தி படுகொலை செய்த 4 பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்படுவது மிகவும்
கவலையளிக்கிறது. அந்த நால்வரும் தற்போது விடுதலை செய்யப்படமாட்டாா்கள்
என்று எங்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.