Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆகஸ்ட் 15ம் தேதி அன்று சென்னையில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது

ஆகஸ்ட் 15ம் தேதி அன்று சென்னையில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது

By: vaithegi Sat, 13 Aug 2022 4:06:32 PM

ஆகஸ்ட் 15ம் தேதி அன்று சென்னையில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது

சென்னை: இந்தியாவில் சுதந்திர தின விழாவை மிக சிறப்பான முறையில் கொண்டாட தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 1.20 லட்சம் போலீஸ் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை, கோயம்பேடு, மதுரை போன்ற முக்கிய பேருந்து நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னை மாவட்ட ஆட்சியர் சுதந்திர தின விழாவை முன்னிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கட்டாயமாக மூட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

liquor sales,chennai ,மதுபானம் ,விற்பனை , சென்னை

எனவே அதன்படி வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி அன்று விற்பனைக் கடைகள் மற்றும் அதனோடு தொடர்புடைய மற்ற பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் உள்ளிட்டவை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய தினம், சென்னையில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை மீறி செயல்படும் மதுபான கடைகளின் உரிமையாளர்கள் மீது தக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags :