Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஏப்ரல் மாதத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் - ஜனாதிபதி டிரம்ப்

அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஏப்ரல் மாதத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் - ஜனாதிபதி டிரம்ப்

By: Karunakaran Sat, 19 Sept 2020 2:52:03 PM

அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஏப்ரல் மாதத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் - ஜனாதிபதி டிரம்ப்

சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ரஷியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.

பல தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக தடுப்பூசியை கண்டுபிடித்து மக்களுக்கு வழங்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

america,corona vaccine,april,president trump ,அமெரிக்கா, கொரோனா தடுப்பூசி, ஏப்ரல், அதிபர் டிரம்ப்

தேர்தலை கருத்தில் கொண்டு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தும் முயற்சியில் அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் தயாராகிவிடும் என அதிபர் டிரம்ப் அறித்தார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாஷிங்டனில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில், நாம் குறுகிய காலத்திலேயே தகுந்த தடுப்பு மருந்தினை பெற்று கொரோனாவை வென்று விடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், தேசிய மருந்துக் கட்டுப்பாட்டாளர்கள் அங்கீகரித்த 24 மணி நேரத்திலேயே கொரோனா தடுப்பு மருந்துகளின் விநியோகம் தொடங்கி விடும். ஒவ்வொரு மாதத்திற்கும் லட்சக்கணக்கான கொரோனா தடுப்பூசி மருந்துகள் கிடைக்க துவங்கும் என்று எதிர்பார்க்கிறேன். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|