Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அனைத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அனைத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By: Nagaraj Mon, 30 Oct 2023 4:47:40 PM

ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அனைத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி: ஊதிய உயர்வு உட்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அனைத்து ஊழியர் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாநிலத் தலைவர் வாலன்டைன் பிரிட்டோ தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை செயலாளர் துரைப்பாண்டி, சுமதி வெங்கடேசன் மற்றும் கோரிக்கையை வலியுறுத்தி மாநில துணைத் தலைவர் பெரியசாமி, மாநில பொதுச் செயலாளர் லட்சுமணன் ஆகியோர் வழங்கினர்.

state administrators,participated,demands,demonstration,slogan ,மாநில நிர்வாகிகள், பங்கேற்றனர், கோரிக்கைகள், ஆர்ப்பாட்டம், கோஷம்

அனைவருக்கும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில் பணிபுரியும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும், வருடம் தோறும் தரப்படும் ஊதிய உயர்வை இந்த ஆண்டு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையான ரூபாய் 35 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை சேலம், திருவாரூர், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500க்கு மேற்பட்ட மாவட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags :