Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்கள் அனைவரும் முதல் பூஸ்டர் தடுப்பூசியை கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும்

மக்கள் அனைவரும் முதல் பூஸ்டர் தடுப்பூசியை கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும்

By: vaithegi Tue, 03 Jan 2023 7:31:45 PM

மக்கள் அனைவரும் முதல் பூஸ்டர் தடுப்பூசியை கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும்

இந்தியா: தற்போதைக்கு 2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவையில்லை .... சீனாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி கொண்டு வருகிறது. இந்த வைரஸ் சீனாவை தொடர்ந்து அமெரிக்கா, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவ தொடங்கி விட்டது.

இதையடுத்து மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 134 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் .எனவே இதனை கருத்தில் கொண்டு இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

booster vaccine,people ,பூஸ்டர் தடுப்பூசி,மக்கள்

இதனை அடுத்து முதல் கட்டமாக இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தாத மக்கள் உடனடியாக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.மேலும் அத்துடன் மீண்டும் முகக்கவசம் அணிவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத்துறை வட்டாரங்கள் தற்போதைக்கு 2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவையில்லை. மக்கள் அனைவரும் முதல் பூஸ்டர் தடுப்பூசியை மட்டும் கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags :