Advertisement

நாளை சென்னையில் அனைத்து பள்ளிகளும் செயல்படும்

By: vaithegi Fri, 27 Jan 2023 8:17:28 PM

நாளை சென்னையில் அனைத்து பள்ளிகளும் செயல்படும்

சென்னை: தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பருவமழை தொடங்கிவிடும். கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு பருவமழை அதிகமாக இருந்தது. பல்வேறு மாவட்டங்களில் அதிகமான மழை பெய்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

மேலும் பள்ளிகளில் விடுமுறையை ஈடு செய்யும் விதத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் வேலை நாட்களாக செயல்படும் என்று கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

chennai,schools,education department ,சென்னை,பள்ளிகள் ,கல்வித்துறை

இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை இயங்கும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கனமழை காரணமாக கடந்த மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

அதை ஈடு செய்யவே நாளை பள்ளிகள் வேலை நாட்களாக செயல்படும் என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை பாட வேளை பின்பற்றப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :