Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவின் வுகான் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளும் மீண்டும் தொடங்கம்

சீனாவின் வுகான் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளும் மீண்டும் தொடங்கம்

By: Karunakaran Wed, 02 Sept 2020 6:17:04 PM

சீனாவின் வுகான் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளும் மீண்டும் தொடங்கம்

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது முதல் சீனாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. முதன் முதலாக கொரோனா தோன்றிய வுகான் நகரில் உள்ள பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டன. இந்நிலையில், கொரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து ஷாங்காயில் உள்ள பள்ளிகள் அனைத்தும் கடந்த மே மாதம் மீண்டும் திறக்கப்பட்டன.

schools,wuhan,china,reopening ,பள்ளிகள், வுஹான், சீனா, மீண்டும் திறப்பு

வுகான் நகரில் பள்ளிகள் செயல்பட அனுமதி வழங்கப்படாமல் இருந்தநிலையில், மேல்நிலைப்பளிகள் மட்டும் திறக்க கடந்த மே மாதம் அனுமதி வழங்கப்பட்டது. தொடக்க நிலை மற்றும் நடுநிலை பள்ளிகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது, கொரோனா தற்போது கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதால் வுகான் நகரிலும் தொடக்க நிலை, நடுநிலை உள்பட அனைத்து பள்ளிகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

பல மாதங்களாக பின்னர் வுகான் நகரில் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதால், மொத்தம் 14 லட்சம் மாணவ/மாணவிகள் ஆர்வமுடம் வகுப்புகளில் பங்கேற்றனர். வுகான் நகரில் பள்ளிகள் திறக்கப்பட்டபோது பிஜீங் மாகாணத்தில் வைரஸ் பரவல் இருப்பதால் அங்கு இந்த மாதம் இறுதியில் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Tags :
|
|