Advertisement

திருவள்ளூரில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்

By: vaithegi Fri, 27 Oct 2023 3:17:46 PM

திருவள்ளூரில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்


திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் சனிக்கிழமையான நாளை (28.10.2023) அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் முழு நேரம் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார் தொடர்பான சுற்றறிக்கை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது ...

தமிழகத்தில் வழக்கமாக அனைத்து பள்ளிகளும் திங்கள் முதல் வெள்ளி வரை இயங்கி வருகிறது. சில நேரங்களில் மழை காலங்களில் விடப்படும் விடுமுறையை ஈடு செய்வதற்காகவும் மாவட்டங்களில் அவ்வப்போது அறிவிக்கப்படும் உள்ளூர் விடுமுறைகளை ஈடு செய்வதற்காகவும் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படும்.

schools,local holidays ,பள்ளிகளும் , உள்ளூர் விடுமுறை


இதையடுத்து கடந்த கல்வியாண்டில் கொரோனா காரணமாக மாணவர்களுக்கு அதிக நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்ட காரணத்தினால் பாடங்களை விரைந்து முடிக்க சனிக்கிழமை பள்ளிகள் இயங்கியது.

அதே போல தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் சனிக்கிழமையான நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..இதையடுத்து திருவள்ளூர் முதன்மைக்கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை 28.10.2023 அன்று அரசு அரசுநிதிஉதவி/ நகராட்சி/ ஆதிதிராவிட நல/ தொடக்க/ நடுநிலை/ உயர்/மேல்நிலைப் பள்ளிகள் முழுவேலை நாளாக (புதன்கிழமை பாடவேளை) செயல்படும் என சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :