Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜோலார்பேட்டை மார்க்கமாக இயக்கப்படும் அனைத்திரையில்களும் இன்று முதல் 3 நாட்களுக்கு ரத்து

ஜோலார்பேட்டை மார்க்கமாக இயக்கப்படும் அனைத்திரையில்களும் இன்று முதல் 3 நாட்களுக்கு ரத்து

By: vaithegi Sat, 24 June 2023 3:05:06 PM

ஜோலார்பேட்டை மார்க்கமாக இயக்கப்படும் அனைத்திரையில்களும் இன்று முதல் 3 நாட்களுக்கு ரத்து

இந்தியா: ரயில் விபத்துகளை தடுக்க, தண்டவாளம், சிக்னல் உள்ளிட்டவை குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு செய்யப்படும். அந்தவகையில், ஜோலார்பேட்டையில் இன்று முதல் 3 நாட்களுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதையடுத்து இது பற்றி ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "ஈரோட்டிலிருந்து அதிகாலை 6.25 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 06412) மற்றும் மறு மார்க்கமாக ஜோலார்பேட்டையிலுருந்து பிற்பகல் 3.10 மணிக்கு ஈரோடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 06411) ஜூன் 24,26,28 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

jollarpet,express ,ஜோலார்பேட்டை ,எக்ஸ்பிரஸ்

அதேபோன்று பெங்களூரிலிருந்து காலை 8.45 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 06551) மற்றும் மறு மார்க்கமாக ஜோலார்பேட்டையிலுருந்து பிற்பகல் 2 மணிக்கு பெங்களூரு செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 06552) வருகிற ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

மேலும், சாந்த்ராகாச்சியில் இருந்து ஜூன் 23 இரவு 6 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் குளிர்சாதன அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 22807) மற்றும் மறு மார்க்கமாக சென்னை சென்ட்ரலிலிருந்து வருகிற ஜூன் 25 -ம் தேதி காலை 8 மணிக்கு சாந்த்ராகாச்சி செல்லும் ரயில் (வண்டி எண்: 22808) முழுமையாக ரத்து செய்யப்பட்டுகிறது.

மேற்குவங்கத்தின் ஹவுராவிலிருந்து வருகிற (ஜூன் 23) மாலை 4.15 மணிக்கு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக மைசூரு செல்லும் அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 22817) மற்றும் மறு மார்க்கமாக மைசூரிலிருந்து வருகிற ஜூன் 25 ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு ஹவுரா செல்லும் ரயில் (வண்டி எண்: 22818) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது" என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :