Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கற்பித்தலின் மூலம் ஒட்டுமொத்த உலகத்தின் உயர்வுக்கு வழிவகுக்கும் ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துக்கள் ...அன்புமணி வலியுறுத்தல்

கற்பித்தலின் மூலம் ஒட்டுமொத்த உலகத்தின் உயர்வுக்கு வழிவகுக்கும் ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துக்கள் ...அன்புமணி வலியுறுத்தல்

By: vaithegi Tue, 05 Sept 2023 10:41:51 AM

கற்பித்தலின் மூலம் ஒட்டுமொத்த உலகத்தின் உயர்வுக்கு வழிவகுக்கும் ஆசிரியர்களுக்கு  நல்வாழ்த்துக்கள்   ...அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: அன்புமணி வலியுறுத்தல் .பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளாதாவது , கற்பித்தலின் மூலம் ஒட்டுமொத்த உலகத்தின் உயர்வுக்கு வழிவகுக்கும் ஆசிரியர்கள் நாளைக் கொண்டாடும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்லாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள 386 பேருக்கும் சிறப்பு வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

‘‘ஏணி தோணி அண்ணாவி நாரத்தை’’ என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். ஏணி என்பது அனைவரையும் மேலே ஏற்றி விட்டு, அதே இடத்தில் நின்று கொண்டிருக்கும். தோணி என்பது நீர் நிலைகளை கடக்க நினைக்கும் அனைவரையும் கரையேற்றி விட்டு, தண்ணீரிலேயே கிடக்கும். அதே போன்று அன்னாவி, அதாவது ஆசிரியர் தம்மிடம் படிக்க வரும் மாணவர்களை உயர்ந்த இடத்திற்கு அனுப்பி விட்டு, அவர் மட்டும் அதே இடத்தில் இருப்பார். நார்த்தங்காய் வயிற்றுக்குள் சென்றால் மற்ற உணவுப் பொருட்களை செறிக்க வைத்து விட்டு, அது மட்டும் செறிக்காமல் வயிற்றில் இருக்கும். ஆசிரியர்கள் தான் அனைவரின் உயர்வுக்கும் காரணம் என்பதை 4 வார்த்தைகளில் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்கள் பாருங்கள். அது தான் ஆசிரியர் சமுதாயத்தின் தனிச்சிறப்பு ஆகும்.

anbumani,teachers ,அன்புமணி ,ஆசிரியர்கள்

இதையடுத்து இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களை இந்த சமுதாயம் போற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் நாள் என்பதை ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே கொண்டாடும் நிலையை மாற்றி ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடும் நிலையை உருவாக்க வேண்டும். அது தான் நமது சமுதாயத்தை வளர்ப்பதற்காக உழைக்கும் ஆசிரியர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.உலகின் உயர்வுக்கு வழிவகுக்கும் ஆசிரியர்களின் உயர்வுக்கு அரசு வழிவகுக்க வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் தொடர்பான கோரிக்கைகள் எதுவுமே அண்மைக்காலமாக கண்டுகொள்ளப் படவில்லை. ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு இன்னும் களையப்படவில்லை; குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இன்றும் அதே நிலையில் தான் வாடுகின்றனர்; அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும், கோரிக்கைகள் ஆய்வு செய்யப்படும் என்ற உத்தரவாதம் தான் கிடைக்கிறதே தவிர, அவர்களின் கோரிக்கைகள் பற்றி உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படுவதில்லை. அவர்களின் நிலை முன்னேற்ற வேண்டும். அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற பாட்டாளி மக்கள் கட்சி போராடும்; விரைவில் கண்டிப்பாக வெற்றி பெறும்.

அனைவரையும் உயர்த்தும் ஆசிரியர்களின் வாழ்க்கை நிலை உயர வேண்டும்; அதன் மூலம் அவர்கள் மாணவர்களை இன்னும் சிறப்பானவர்களாக மாற்ற அரசு உத்வேகம் அளிக்க வேண்டும். ஆசிரியர்கள், அவர்களால் மாணவர்கள், அவர்களால் இச்சமுதாயம் முன்னேற வேண்டும்; அந்த இலக்கை நோக்கி உழைக்க ஆசிரியர்கள் நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :