மணிப்பூர் கலவரத்தால் அனைத்து ரயில்களும் ரத்து; ரயில்வே துறை அறிவிப்பு
By: Nagaraj Fri, 05 May 2023 8:38:20 PM
மணிப்பூர்: அனைத்து ரயில்களும் ரத்து... மணிப்பூரில் 2 பிரிவினருக்கு இடையே கலவரம் நடப்பதால் அம்மாநிலத்திற்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கலவரம் கட்டுக்குள் வந்து இயல்பு நிலை திரும்பும் வரையில் மணிப்பூருக்கு ரயில் இயக்கப்படாது என ரயில்வே துறை அறிவித்துள்ளது. மணிப்பூரில் மோரே கிராமத்தில் குக்கி, மைத்தேயி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.
2 இனங்களுக்கிடையே ஏற்பட்ட கலவரத்தில் பல்வேறு வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீக்கியிரையாக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து கலவரம் காரணமாக நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மணிப்பூரில் இணைய சேவை தொடர்ந்து முடக்கப்பட்டு உள்ளது.
இதனால், மணிப்பூர் மாநிலத்தில் பல இடங்களில் பதற்றமான சூழல் ஒன்று நிலவி கொண்டு வருகிறது. இந்த நிலையில், மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே கலவரம் நடப்பதால் அம்மாநிலத்திற்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.