Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா விஷயத்தில் சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் உதவியதாக குற்றச்சாட்டு

கொரோனா விஷயத்தில் சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் உதவியதாக குற்றச்சாட்டு

By: Nagaraj Thu, 24 Sept 2020 4:32:09 PM

கொரோனா விஷயத்தில் சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் உதவியதாக குற்றச்சாட்டு

கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சீன அரசைக் குற்றம்சாட்டி வந்த வைராலஜிஸ்ட் லீ மெங் யான் உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு உதவியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்று குறித்து சீன அரசு மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இத்தகைய சூழலில் கடந்த சில தினங்களுக்கு சீனாவைச் சேர்ந்த வைராலஜிஸ்ட் லீ மெங் யான் என்பவர் கொரோனா வைரஸ் வூஹான் மாகாண ஆராய்ச்சிக் கூடத்தில் உருவாக்கப்பட்டதாக பரபரப்பைக் கிளப்பி இருந்தார்.

government of china,world health organization,assisted,corona ,சீன அரசு, உலக சுகாதார அமைப்பு, உதவியது, கொரோனா

இந்நிலையில் இதுகுறித்து பேசிய லீ மெங் யான், கொரோனா வைரஸ் குறித்து உலகத்திற்கு தெரிவதற்கு முன்பே சீன அரசு அதனைக் குறித்து அறிந்திருந்ததாகவும், உலக சுகாதார நிறுவனம் இதனை மறைக்க சீன அரசாங்கத்திற்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.

சீன அரசு மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் லீ மெங் யான் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :