234 தொகுதிகளிலும் மக்களுடன் கூட்டணி; அமைச்சரின் தகவலால் பரபரப்பு
By: Nagaraj Fri, 09 Oct 2020 8:08:45 PM
அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறிய தகவல் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திருத்துறைப்பூண்டியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 32 ஆண்டுகளுக்கு பின் ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சியை பிடித்தது என்ற சரித்திரத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படைத்தார். 2021ல் நடைபெறும் பொது தேர்தலில் அதிமுக மீண்டும் தமிழகத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும்.
சரித்திரத்தை முதல்வர் எடப்பாடி தலைமையில் ஓபிஎஸ் வழிகாட்டுதலுடன் நடத்திக் காட்டுவோம்.
அதிமுகவை பொறுத்தவரை தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியாக
234 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தையே நிறுத்தி தனித்து களம் கண்டு
ஆட்சியை பிடித்து காட்டி இருக்கிறோம். எனவே, மக்களோடு கூட்டணி என்கிற
முறையில் தேர்தலை நடத்திக் காட்டுவோம். இவ்வாறு ஓ.எஸ்.மணியன் கூறினார்.
கடந்த
சில தினங்களுக்கு முன் பேசிய பாஜ முன்னாள் மத்திய அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் 234 தொகுதிகளிலும் மக்களோடு கூட்டணி
அமைத்து தேர்தலை சந்திப்போம் என்று கூறி உள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.