Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 1,500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு ரூ.79.28 லட்சம் நிதி ஒதுக்கீடு

1,500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு ரூ.79.28 லட்சம் நிதி ஒதுக்கீடு

By: vaithegi Sun, 03 Sept 2023 11:39:31 AM

1,500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு ரூ.79.28 லட்சம் நிதி ஒதுக்கீடு

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழக சட்டப்பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கையின் மீது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பேசும்போது,

பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1,000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் தற்போது பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ள 500 நரிக்குறவர் குடும்பங்கள் என்று மொத்தம் 1,500 குடும்பங்களுக்கு ரூ.45 கோடி மதிப்பீட்டில் தகுதியின் அடிப்படையில் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவித்தார்.

houses,tribes ,வீடுகள் ,பழங்குடியினர்

இதையடுத்து அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், 2023-24-ம்ஆண்டில் 1,500 பழங்குடியினர்களுக்கு தமிழகத்தில் 19 மாவட்டங்களில் வீடுகள் கட்டுவதற்கு ரூ.79 கோடியே 28 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும் 1,500 வீடுகளை விரைந்து கட்டி முடிக்கத் தேவையான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார் யவ்ன அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|