Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெருங்குடி விமான நிலையம் அருகே அம்பேத்கர் சிலை திறப்பு

பெருங்குடி விமான நிலையம் அருகே அம்பேத்கர் சிலை திறப்பு

By: Nagaraj Fri, 09 Dec 2022 4:48:57 PM

பெருங்குடி விமான நிலையம் அருகே அம்பேத்கர் சிலை திறப்பு

மதுரை: மதுரை பெருங்குடி விமான நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.

தென்காசி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டார். நேற்று தென்காசியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் அவர் நேற்று இரவு மதுரை வந்தடைந்தார்.

இந்த நிலையில், இன்று காலை தூய்மை பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை மதுரை மாநகராட்சி கூட்டரங்கில் முதல் அமைச்சர் தொடங்கி வைத்தார். தூய்மை பணியாளர்களுக்கான காலணிகள், கவச உடைகள், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் முதல்-அமைச்சர் வழங்கினார்.

ambedkar,madurai,statue, ,அம்பேத்கர், மதுரை, வெண்கல சிலை

அதன்பின் மதுரை பெருங்குடி விமான நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி மதுரை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

Tags :
|