இங்கிலாந்தில் செவிலியர்களுடன் இணைந்து ஆம்புலன்ஸ் ஊழியர்களும் பணி புறக்கணிப்பு
By: Nagaraj Fri, 20 Jan 2023 6:43:09 PM
இங்கிலாந்து: இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வரும் பிப்ரவரி 6ம் தேதி வேலைநிறுத்த நடவடிக்கை எடுப்பதில் செவிலியர்களுடன் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இணையவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்த நான்கு புதிய வேலைநிறுத்த நடவடிக்கையில், ஒன்று செவிலியர்களின் வேலைநிறுத்த திகதியுடன் ஒத்துப்போகிறது.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் றோயல் காலேஜ் ஒஃப் நர்சிங் இருவரும் ஒரே
நாளில் வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபடுவது இதுவே முதல் முறை. இந்த வாரம்
புதன் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தங்களில் றோயல்
காலேஜ் ஒஃப் நர்சிங் உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
தேசிய
வெல்ஷ் சேவையுடன் 10 ஆங்கில ஆம்புலன்ஸ் சேவைகளில் ஏழு சேவைகளில் துணை
மருத்துவர்கள், அழைப்பை கையாளுபவர்கள் மற்றும் ஆதரவு பணியாளர்கள் உள்ளிட்ட
ஊழியர்களின் வெளிநடப்புக்கள் பிப்ரவரி 6 மற்றும் 20 மற்றும் மார்ச் 6
மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும்.