இனவெறி எதிர்ப்பு போராட்டங்களால் அதிரும் அமெரிக்கா
By: Karunakaran Mon, 08 June 2020 12:21:56 PM
அமெரிக்காவில் கடந்த மாதம் 25-ந் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பு இனத்தை சேர்ந்தவர் வெள்ளை இனத்தை சேர்ந்த போலீஸ் பிடியில் சிக்கி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் 4 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகிகின்றன.12-வது நாளாக நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் பங்கேற்றவர்கள் இனவெறிக்கு எதிரான கோஷங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
வாஷிங்டனில் நடந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு, நாடாளுமன்றம், ஆபிரகாம் லிங்கன் நினைவுச்சின்னம் மற்றும் வெள்ளை மாளிகை அருகேயுள்ள லாபாயெட்டே பூங்காவுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். நியுயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ போன்ற நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தன.
சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 12-வது நாளில் நடந்த போராட்டங்களினால் நாடே அதிர்ந்தது. இதற்கிடையே ஜார்ஜ் பிளாய்ட்க்கு நடைபெற்ற நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.