Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது - டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது - டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

By: Karunakaran Mon, 17 Aug 2020 2:40:31 PM

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது - டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், 2-வது முறையாக போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

கொரோனாவுக்கு மத்தியிலும் தேர்தல் பிரச்சாரம் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

america,president,joe biden,donald trump ,அமெரிக்கா, ஜனாதிபதி, ஜோ பிடன், டொனால்ட் டிரம்ப்

பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் அதிபர் டிரம்ப் பேசியபோது, ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது. அவரை விட துணை அதிபராகப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் மோசமானவர். ஜோ பிடன் அதிபரானால் உடனடியாக போலீஸ் துறையை ஒன்றுமில்லாமல் செய்வதற்கு சட்டத்தைக் கொண்டு வந்துவிடுவார் என்று கூறியுள்ளார்.

மேலும் அதிபர் டிரம்ப் பேசுகையில், கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவரைவிட எனக்கு இந்திய வம்சாவளியினர் ஆதரவு அதிகம் இருக்கிறது. ஜோ பிடன், கமலா ஹாரிஸ் இருவருமே போலீஸ் துறைக்கு எதிராக செயல்பட கூடியவர்கள். உங்களுடைய மரியாதையை, கவுரவத்தை இருவரும் பறிக்கின்றனர் என்று கூறினார்.

Tags :