Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிணைய கைதிகளாக வைத்திருந்த அமெரிக்காவை சேர்ந்த தாய், மகள் விடுவிப்பு

பிணைய கைதிகளாக வைத்திருந்த அமெரிக்காவை சேர்ந்த தாய், மகள் விடுவிப்பு

By: Nagaraj Sat, 21 Oct 2023 4:36:47 PM

பிணைய கைதிகளாக வைத்திருந்த அமெரிக்காவை சேர்ந்த தாய், மகள் விடுவிப்பு

பாலஸ்தீனம்: அமெரிக்க பிணைக் கைதிகள் விடுவிப்பு... இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலின் போது பிணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தாய் மற்றும் மகளை ஹமாஸ் போராளிகள் விடுவித்துள்ளனர்.

அவர்கள் இருவரும் எகிப்து வழியாக இஸ்ரேல் அனுப்பி வைக்கப்படுவதற்காக காசாவில் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

palestine,israel,war,hostages,liberation,america ,பாலஸ்தீனம், இஸ்ரேல், போர், பிணைக்கைதிகள், விடுவிப்பு, அமெரிக்கா

இது பற்றி ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிணயக் கைதிகள் 200 பேரில் அமெரிக்காவை சேர்ந்த தாய்-மகள் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்து உள்ளனர்.

மேலும் மனிதாபிமான அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளனர். தொடர்ந்து இஸ்ரேல் – பாலஸ்தீனம் மத்தியில் போர் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|