- வீடு›
- செய்திகள்›
- அமெரிக்காவின் ‘ஜி.பி.எஸ்.3’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தம்
அமெரிக்காவின் ‘ஜி.பி.எஸ்.3’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தம்
By: Karunakaran Thu, 02 July 2020 2:35:44 PM
அமெரிக்கா தனது விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதியாக ‘ஜி.பி.எஸ்.3’ செயற்கைக்கோள்களை உருவாக்கியுள்ளது. குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணிலே ஏவப்பட்டு வருகின்றன.
இதன் முதல் செயற்கைக்கோள் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏவப்பட்டது. 2வது செயற்கைக்கோள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் 3வது ‘ஜி.பி.எஸ்.3’ செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கேப் கனவெரல் விமானப்படை தளத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக ‘பால்கன்9’ ராக்கெட் உள்ளது. இந்த ‘பால்கன்9’ ராக்கெட் ‘ஜி.பி.எஸ்.3’ செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணிற்கு சென்றது.
விண்ணில் சீறிப்பாய்ந்த பின், அந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதன் மூலம் அமெரிக்கா தனது விண்வெளி திட்டத்தின் மூன்றாவது செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.