- வீடு›
- செய்திகள்›
- கொரோனா வைரஸ் தடுப்பில் அமெரிக்காவின் மிக கடுமையான தவறு; பேராசிரியர் செங்யுங் நியன் விமர்சனம்
கொரோனா வைரஸ் தடுப்பில் அமெரிக்காவின் மிக கடுமையான தவறு; பேராசிரியர் செங்யுங் நியன் விமர்சனம்
By: Nagaraj Thu, 14 May 2020 7:47:56 PM
அமெரிக்காவின் கடுமையான தவறு... அரசியல், அறிவியலை மீறி கொரோனா வைரஸ் தடுப்பில் அமெரிக்காவின் மிக கடுமையான தவறு செய்துள்ளது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கிழக்காசிய ஆய்வகத்தின் பேராசிரியர் செங் யுங் நியன் தெரிவித்தார்.
உண்மையில் புதிய ரக கொரோனா வைரஸ் பரவும் முன் இப்பிரச்சினையை பேராசிரியர் செங் யுங் நியன் கண்டறிந்தார். வைரஸ் பரவிய பிறகு, அமெரிக்க அரசியலாளர்களின் நடவடிக்கை மேலும் மோசமானது.
வைரஸ் பரவல் தடுப்பு பொருளாதாரம் மற்றும் பொது தேர்தலின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என கவலைப்பட்ட, அமெரிக்காவின் அரசியலாளர்கள் தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அரசியல் அறிவியலை மீறி, பொது மக்களின் உயிரைப் பேணிக்காக்கும் பயனுள்ள வழிமுறையைக் கண்டறிய முடியாது என்று செங் யுங் நியன் தெரிவித்தார்.
அமெரிக்காவின் அரசியலாளர்கள், வைரஸ் பரவல் தடுப்பு பணியில் கவனம் செலுத்தியிருந்தால், நிறைய அமெரிக்கர்களின் உயிர் பேணிக்காக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.