கனடா மாகாணம் ஒன்றில் நடந்த விபத்து... போலீசார் விசாரணை
By: Nagaraj Sat, 01 Oct 2022 10:38:05 AM
கனடா: ஒன்ராறியோ அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவின் தென்கிழக்கு லண்டன் பகுதியின் 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நான்கு வாகனங்கள் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில்
தெரிவிக்கின்றனர்.
இரண்டு வர்த்தக வாகனங்களும், இரண்டு பயணிகள்
வாகனங்களும் இந்த விபத்துச் சம்பவத்தில் மோதிக்கொண்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்த தகவல்கள் எதுவுமிருந்தால் அதனை
அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.