தொழில்நுட்ப கோளாறு காரணமாக வயலில் இறக்கப்பட்ட விமானப்படை ஹெலிகாப்டர்
By: Nagaraj Fri, 02 Dec 2022 8:52:18 PM
புனே: தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் அவசரமாக வயலில் தரையிறக்கப்பட்டது.
இந்திய விமானப்படையின் சேடக் ஹெலிகாப்டர் நேற்று புனேவில் இருந்து புறப்பட்டது. பாராமதி பகுதியில் ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்த போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக பாராமதி, கந்தாஜ் கிராமத்தில் காலை 10.30 மணியளவில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- எங்களுக்கு கிடைத்த தகவலின்படி புனேவில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் புறப்பட்டு சென்றுள்ளன.
அதில் ஒன்று கந்தாஜ் கிராமத்தில் உள்ள அனுமந்த் அதோல் என்ற விவசாயியின்
நிலத்தில் அவசர அவசரமாக நிலத்தில் இறங்கியது. தற்போது வயலில் எதுவும்
பயிரிடப்படவில்லை.
ஹெலிகாப்டரில் 4 பேர் இருந்தனர். தகவல்
கிடைத்ததும் போலீசார் பாதுகாப்பு படையினருடன் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு,
அன்று மதியம் 1 மணிக்கு புறப்பட்டது. அவர் கூறியது இதுதான். புனேயில்
நேற்று விமானப்படை ஹெலிகாப்டர் களத்தில் இறங்கிய சம்பவத்தால் பரபரப்பு
ஏற்பட்டது