Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆம்புலன்ஸ் பணியாளர் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு

ஆம்புலன்ஸ் பணியாளர் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு

By: Nagaraj Tue, 27 Dec 2022 10:41:53 AM

ஆம்புலன்ஸ் பணியாளர் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு

மதுரை: ஆம்புலன்ஸ் பணியாளர் மீது தாக்குதல்... மதுரை மேலூர் அருகே முதலுதவி சிகிச்சை அளித்த 108 ஆம்புலன்ஸ் பணியாளரை கஞ்சா போதையில் இருந்த ஆசாமி கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பதினெட்டான்குடியில் இருசக்கர வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்து மேலூரில் இருந்துவந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம், காயமடைந்தவர்களை ஏற்றிக் கொண்டு சென்றது.
செல்லும் வழியில், கஞ்சா போதையில் இருந்த ஆரப்பாளையத்தைச் சேர்ந்த முத்துபாரதி, ஆம்புலன்ஸ் பணியாளர் விமல் மீது கத்தரியைக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில், படுகாயமடைந்த விமல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், கத்திரியால் குத்திய நபரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

hospital,cannabis addiction,scissors,assault investigation ,மருத்துவமனை, கஞ்சா போதை, கத்திரிக்கோல், தாக்குதல் விசாரணை

செல்லும் வழியில், கஞ்சா போதையில் இருந்த ஆரப்பாளையத்தைச் சேர்ந்த முத்துபாரதி, ஆம்புலன்ஸ் பணியாளர் விமல் மீது கத்தரியைக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில், படுகாயமடைந்த விமல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், கத்திரியால் குத்திய நபரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags :