- வீடு›
- செய்திகள்›
- 3 சிறுவர்களை கொலை செய்த வழக்கில் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் குற்றவாளி என நிரூபணம்
3 சிறுவர்களை கொலை செய்த வழக்கில் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் குற்றவாளி என நிரூபணம்
By: Nagaraj Mon, 01 May 2023 08:52:59 AM
கலிபோர்னியா: குற்றவாளி என நிரூபணம்... வீட்டு காலிங் பெல் அடித்து விளையாடிய 3 சிறுவர்களை கொலை செய்த வழக்கில் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் குற்றவாளி என நிருபணமாகியுள்ளது.
காலிங் பெல்லை அடித்துவிட்டு ஓடுவதை அமெரிக்க சிறுவர்கள் விளையாட்டாக செய்து வருகின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், கலிபோர்னியாவில் வசித்துவந்த அனுராக் சந்திராவின் வீட்டு காலிங் பெல்லை 16 வயது சிறுவர்கள் 3 பேர் அடித்துள்ளனர்.
கதவை திறந்த அனுராக்கை நோக்கி ஆபாச செய்கைகளை காண்பித்துவிட்டு, நண்பர்களுடன் காரில் தப்பிச் சென்றனர். அளவிற்கதிகமாக மது அருந்தியிருந்த அனுராக், தனது காரில், 160 கிலோமீட்டர் வேகத்தில் விரட்டிச் சென்று சிறுவர்கள் சென்ற கார் மீது மோதியுள்ளார்.
அந்த கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், உள்ளே இருந்த 6 சிறுவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். மற்ற மூவரும் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் 3 சிறுவர்களை கொலை செய்த அனுராக் குற்றவாளி என நிருபணமாகியுள்ளது.