Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செப்டம்பர் 26ம் தேதியான நாளை, மின்தடை சில பகுதிகளில் செய்யப்படுவதாக அறிவிப்பு

செப்டம்பர் 26ம் தேதியான நாளை, மின்தடை சில பகுதிகளில் செய்யப்படுவதாக அறிவிப்பு

By: vaithegi Sun, 25 Sept 2022 3:10:46 PM

செப்டம்பர் 26ம் தேதியான நாளை, மின்தடை சில பகுதிகளில் செய்யப்படுவதாக அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் மின்தடை இல்லாமல் முழுவதுமாக மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டு அரசு செயல்பட்டு கொண்டு வருகிறது. ஆனால், மற்ற நேரங்களில் தடை இல்லா மின்சாரத்தை வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து மின் நிலையங்களிலும் மாதம் தோறும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இதனால் தகுந்த முன்னறிவிப்புடன் பகுதி வாரியாக தமிழகத்தில் மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் செப்டம்பர் 26ம் தேதியான நாளை தமிழகத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த போடி துணை மின் நிலைய பகுதியில் மற்றும் பெரியகுளம் துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

power supply,maintenance work ,மின்தடை ,பராமரிப்பு பணி

எனவே அதன்படி, போடி துணை மின் நிலையத்தை சேர்ந்த போடி, போ.மீனாட்சி புறம், போ.அணைக்கரைப்பட்டி, குரங்கனி போன்ற பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இதேபோல், பெரியகுளம் பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆண்டிபட்டி, ஏத்தக் கோயில், ராஜதானி, டி.சுப்பலா, பாலம்பக்கோட்டை, ராஜகோபாலன்பட்டி, பொம்மிநாயகன் பட்டி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 27ம் தேதி அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :