Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பூகம்பத்தில் சிக்கி இந்தியர் ஒருவரை காணவில்லை என்று தகவல்

பூகம்பத்தில் சிக்கி இந்தியர் ஒருவரை காணவில்லை என்று தகவல்

By: Nagaraj Thu, 09 Feb 2023 08:56:29 AM

பூகம்பத்தில் சிக்கி இந்தியர் ஒருவரை காணவில்லை என்று தகவல்

துருக்கி: இந்தியரை காணவில்லை... துருக்கி-சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லையோர நகரங்களில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. துருக்கி இயல்பு நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆகலாம். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் முழு அளவிலான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக மூன்று மாதங்களுக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

earthquake,indians,turkey ,, இந்தியர்கள், துருக்கி, நிலநடுக்கம்

இந்நிலையில், துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 75 இந்தியர்களுக்கு உதவி கோரி அழைப்பு வந்துள்ளதாகவும், ஒருவரை காணவில்லை என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காணாமல் போனவரின் குடும்பத்தினருடன் அவர்கள் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தொலைதூரப் பகுதியில் சிக்கியுள்ள 10 இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :