Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முல்லை பெரியாறு அணை பராமரிப்பு குறித்த விசாரணை... வரும் 20ம் தேதி நடக்கிறது

முல்லை பெரியாறு அணை பராமரிப்பு குறித்த விசாரணை... வரும் 20ம் தேதி நடக்கிறது

By: Nagaraj Fri, 17 Mar 2023 11:00:46 PM

முல்லை பெரியாறு அணை பராமரிப்பு குறித்த விசாரணை... வரும் 20ம் தேதி நடக்கிறது

டெல்லி: அடுத்த கட்ட விசாரணை முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணியை மேற்கொள்ள மேற்பார்வைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி ஜோ ஜோசப் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு , உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அடுத்தகட்ட விசாரணை வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச நிபுணர்கள் அடங்கிய சுதந்திர அமைப்பு ஆய்வு நடத்த வேண்டும் என்றும், இந்த ஆய்வை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்றும் கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

affidavit,committee,next,work, ,அணை, ஜோ ஜோசப், முல்லைப் பெரியாறு, விசாரணை

மேலும், இந்த அணை தொடர்பான ஆய்வின்போது தமிழக, கேரள அரசு அதிகாரிகள் உடன் இருக்க வேண்டும் என்றும், ஆய்வுப் பணிகளை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் கேரள அரசின் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வரும் 20ம் தேதி விசாரணையின் போது உச்சநீதிமன்றத்தில் பதில் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|
|