- வீடு›
- செய்திகள்›
- கொரோனா நோயாளிகளுக்கு பலன் அளிக்கும் மருந்துகள் பட்டியலை வெளியிட்ட சர்வதேச விஞ்ஞானிகள் குழு
கொரோனா நோயாளிகளுக்கு பலன் அளிக்கும் மருந்துகள் பட்டியலை வெளியிட்ட சர்வதேச விஞ்ஞானிகள் குழு
By: Nagaraj Sun, 26 July 2020 2:29:12 PM
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பலன் அளிக்கும் மருந்துகளின் பட்டியலை சர்வதேச விஞ்ஞானிகள் குழு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய தடுப்பூசிகளை கண்டுபிடித்து மனிதர்களிடையே சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சர்வதேச விஞ்ஞானிகள் குழு, தற்போது பயன்பாட்டில் இருக்கும் மருந்துகளை ஆய்வு செய்து கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பலன் அளிக்கும் மருந்துகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் சான்போர்ட் பர்ன்ஹம் பிரேப்ஸ் மருத்துவ கண்டுபிடிப்பு மையத்தின் பேராசிரியர் சுமித் சண்டா தலைமையிலான இந்த குழுவினர், சுமார் 12,000 க்கும் மேற்பட்ட மருந்துகளை ஆய்வு செய்தனர்.
இதில் குறிப்பிட்ட 21 மருந்துகள் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பலன்
அளிப்பதாக விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் முதல்
வரிசையில் இருப்பது எச்.ஐ.வி. வைரஸ் மருந்தான அடாஜன்விர். 2 வது இடத்தில்
ரெமிடெசிவிர் மருந்தும் 3 வது இடத்தில் இபாவிர்ன்ஸ் மருந்தும் உள்ளன.
ரிடோனவிர்,
டோலுட்டிகிராவிர், அசுனாபிரிவிர் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
அத்தோடு குளோபாஜிமைன், ஹன்பாங்சின் ஏ, அபிலிமோட், ஒன்எ 5334, அஸ்டமிஜோல்,
சிமிபிரிவிர், தருணாவிர், லோபின்விர் உட்பட ஒட்டுமொத்தமாக 21 மருந்துகள்
ஆய்வறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
இவற்றில் 13 மருந்துகள்
ஏற்கெனவே கொரோனா வைரஸ் ஆராய்ச்சிக்காக மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு
பரிசோதனை செய்யப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.