Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லஞ்ச புகாரில் கைது செய்ய முயன்ற போது தற்கொலை செய்து கொண்ட அதிகாரி

லஞ்ச புகாரில் கைது செய்ய முயன்ற போது தற்கொலை செய்து கொண்ட அதிகாரி

By: Nagaraj Sat, 25 Mar 2023 11:29:05 PM

லஞ்ச புகாரில் கைது செய்ய முயன்ற  போது தற்கொலை செய்து கொண்ட அதிகாரி

காந்திநகர்: லஞ்ச புகாரில் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தில் பணிபுரியும் அதிகாரியை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் முயன்ற போது அவர் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வருபவர் ஜாவ்ரி மால் பிஷோனி (44). உணவுப் பெட்டிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதற்கான சான்றிதழ் வழங்க தொழிலதிபரிடம் ரூ.9 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

அதன்படி நேற்று தொழிலதிபரிடம் பிஷோனி ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்றார். அப்போது, சிபிஐ அதிகாரிகள் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.

arrest,cbi,officer,suicide, ,அதிகாரி, கைது, சிபிஐ, தற்கொலை

பின்னர், வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் 4வது மாடியில் உள்ள பிஷோனியின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இரவோடு இரவாக சோதனை நடத்தினர்.

இரவு முழுவதும் சோதனை தொடர்ந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு சோதனை நிறைவு பெற்றது. இதையடுத்து லஞ்ச புகாரில் பிஷோனியை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் முயன்றனர். அப்போது பிஷோனி வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.

பலத்த காயம் அடைந்த பிஷோனி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
|
|