பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆனந்த சங்கரி கடிதம்
By: Nagaraj Fri, 21 Aug 2020 12:40:05 PM
தார்மீக கடமை... ஐந்து ராஜபக்ஷக்களுக்கும் இணைந்து பிரச்சினைகளை கையிலெடுத்து அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் தார்மீக கடமை காணப்படுவதாக தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் எழுதியுள்ள முக்கிய கடிதத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
“நீங்கள் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதற்கு எனது உளங் கனிந்த வாழ்த்துகள்.
இப்பதவி தங்களுக்கு புதிதல்ல என்பதையும் அனைவரும் அறிவோம். தெற்கிலிருந்து
சபாநாயகராக தெரிவாகியுள்ளது குறித்து பெருமையடைகிறோம்.
சிரேஷ்ட
பாராளுமன்ற உறுப்பினரான அவர் பாராளுமன்ற சம்பிரதாயங்களை நன்கறிந்தவர்.
மாகாண முதலமைச்சராகவும் மாகாண ஆட்சி முறையை நன்கறிந்தவர் அவர். பல அமைச்சு
பதவிகளை வகித்துள்ளார். நிர்வாகத் துறையில் பாரிய அனுபவம் கொண்டவர்.
பக்கச்சார்பின்றி நடுநிலையாக செயற்படும் ஆளுமை அவருக்குள்ளது. என்றார்.