- வீடு›
- செய்திகள்›
- தமிழகம் முழுவதும் அரசு பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள மதுக்கடைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது .. அன்பில் மகேஷ்
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள மதுக்கடைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது .. அன்பில் மகேஷ்
By: vaithegi Sat, 20 Aug 2022 05:56:01 AM
மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்தார்.
இதனை அடுத்து அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் அரசு பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள மதுக்கடைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் இதற்கு முன்பு இது பற்றி புகார்கள் பல வந்த போது, துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தளங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அருகில் மக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகள் தொடர்பாக புகார்கள் வரும் பட்சத்தில், அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.