Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இன்புளூயன்சா காய்ச்சல் உறுதி

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இன்புளூயன்சா காய்ச்சல் உறுதி

By: vaithegi Wed, 28 Sept 2022 12:26:34 PM

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு  இன்புளூயன்சா காய்ச்சல் உறுதி

சென்னை: தமிழகத்தில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக டெங்கு, இன்ஃபுளுயன்சா போன்ற காய்ச்சலால் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகிறது. தற்போது பாதிப்பு குறைந்த காரணத்தால், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காய்ச்சல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

dear mahesh poiyamozhi,influenza ,அன்பில் மகேஷ் பொய்யாமொழி,இன்புளூயன்சா

இதையடுத்து அதில், அவருக்கு எச்1 என்1 வகை இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனால், ஆஸ்பத்திரியிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- பருவநிலை மாற்றம் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு இன்யுளூயன்சா காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தற்போது, தனிமையில் சிகிச்சை பெற்று கொண்டு வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் வீடு திரும்புவார் என அவர் கூறினார்.

Tags :