- வீடு›
- செய்திகள்›
- மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி அரசு கொண்டு வரும் திட்டங்களை நல்ல விதத்தில் பயன்படுத்த வேண்டும் .. அன்பில் மகேஷ்
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி அரசு கொண்டு வரும் திட்டங்களை நல்ல விதத்தில் பயன்படுத்த வேண்டும் .. அன்பில் மகேஷ்
By: vaithegi Wed, 17 Aug 2022 6:29:49 PM
திருச்சி: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளியில் புத்தக வாசிப்பு இயக்கத்தை தொடங்கி வைத்து பள்ளி மாணவர்களுக்கான நூலக செயலியை அறிமுகம் செய்தார்.
இதை அடுத்து அவர் கூறியதாவது, ஒவ்வொரு மாணவரும் நூலகத்திற்கு சென்று 20 நிமிடமாவது புத்தகங்களை வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசித்தால் மாணவர்களுக்கு ஏந்தவொரு கவுன்சிலிங் வழங்க வேண்டிய தேவை இருக்காது. மாணவர்களை படிப்பில் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக புத்தகம் படிக்கலாம் வெளிநாடு பறக்கலாம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்தள்ளது.
இதனையடுத்து அடுத்த கட்டமாக மாணவர்களுக்கு வாரம் ஒரு புத்தகம் வழங்கப்படும். எனவே அந்த புத்தகத்தை படித்து விட்டு வந்து அந்த புத்தகத்தின் கருத்துக்களை ஓவியமாக வரையலாம். விமர்சனம் செய்யலாம். கட்டுரையாக எழுதலாம். இதன் மூலம் மாணவர்கள் புதிய உலகத்தை படைக்க வேண்டும். வாசிக்கும் பழக்கம் உள்ள மாணவர்களை தேர்வு செய்து அவர்களை நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்களுடன் கலந்துரையாடவும், பிற நாடுகளில் உள்ள புகழ்பெற்ற நூலகங்களுக்கு அழைத்து செல்லவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
எனவே மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி அரசு கொண்டு வரும் திட்டங்களை நல்ல விதத்தில் பயன்படுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவது புத்தகங்கள் மட்டுமே என அவர் கூறினார்.