Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பால் கொள்முதல் விலையை உயர்த்துக .. அன்புமணி, அண்ணாமலை கோரிக்கை

பால் கொள்முதல் விலையை உயர்த்துக .. அன்புமணி, அண்ணாமலை கோரிக்கை

By: vaithegi Fri, 26 May 2023 1:38:44 PM

பால் கொள்முதல் விலையை உயர்த்துக   ..   அன்புமணி, அண்ணாமலை கோரிக்கை

சென்னை: அமுல் நிறுவனத்திடம் ஆவின் வீழ்ந்துவிடாமல் தடுக்க, பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆகியோர் கோரிக்கை விடுப்பு ...

anbumani,annamalai,purchase price of milk ,அன்புமணி, அண்ணாமலை ,பால் கொள்முதல் விலை

இதனை அடுத்து இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட ட்விட்டர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காஞ்சிபுரம், திருவள்ளுர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தினமும் 30 ஆயிரம் லிட்டர் பாலை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்து, அதற்காக சுயஉதவிக் குழுக்களை அமுல் உருவாக்கி வருகிறது. மேலும் ஆவின் கொள்முதல் செய்யும் பாலுக்கு லிட்டருக்கு ரூ.32 முதல் ரூ.34 வரை மட்டுமே விலை வழங்கப்படும் நிலையில், அமுல் நிறுவனம் லிட்டருக்கு ரூ.36 வரை விலை வழங்குகிறது. இதனால் ஆவின் கொள்முதல் செய்யும் பாலின் அளவு வெகுவாகக் குறையும். அமுல் நிறுவனத்தின் இந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தால், கொள்முதலிலும், விற்பனையிலும் ஆவின் நிறுவனம் பெரும் பங்கை இழக்க நேரிடும்.

அமுல் நிறுவனத்திடம் ஆவின் நிறுவனம் ஒரு போதும் வீழ்ந்து விடக்கூடாது. தமிழகத்தின் பால் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கு வெறும் 16 சதவீதம் மட்டுமே. இதை 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அமுல் நிறுவனத்தின் அதிரடி நுழைவால், இருக்கும் சந்தைப் பங்கையும் அமுலிடம் ஆவின் இழக்கும் நிலை உருவாகியுள்ளது. இதை தடுப்பதற்கான திட்டங்களை வகுத்து, தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். எனவே, பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.42, எருமைப்பாலுக்கு ரூ.51 என்ற விலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

anbumani,annamalai,purchase price of milk ,அன்புமணி, அண்ணாமலை ,பால் கொள்முதல் விலை

அதைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தாவது, அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் சிறிதளவும் ஈடுபடாமல் திமுகவினர் நடத்தும் தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் முதல்வர், மக்களின் கவனத்தை திசைதிருப்ப அரசு நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். தினசரி பால் கொள்முதலை அதிகரித்து, பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், ஆவின் நிறுவனத்தை மேலும் திறம்படச் செயல்படுத்துவதிலும் கவனத்தைச் செலுத்தாமல், வழக்கமான திசைதிருப்புதல் நாடகங்களில் ஈடுபடுவதை முதல்வர் தவிர்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்

Tags :