Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • என்னையே நான் விளம்பரப் படுத்திக் கொள்ளவில்லை ...அன்புமணி ராமதாஸ்

என்னையே நான் விளம்பரப் படுத்திக் கொள்ளவில்லை ...அன்புமணி ராமதாஸ்

By: vaithegi Tue, 24 Oct 2023 08:56:25 AM

என்னையே நான் விளம்பரப் படுத்திக் கொள்ளவில்லை   ...அன்புமணி ராமதாஸ்

சென்னை: சிவகாசியில் தனியார் ரத்த மையத்தை திறந்து வைத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அவசர ஊர்தியை கொடியசைத்து, ரத்த தானத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரத்ததான முகாம்கள் நடத்தியவர்களையும், ரத்ததானம் வழங்குவோரரையும், ஊக்குவிக்கும் விதமாக பாராட்டு தெரிவித்து, மரக்கன்றுகளுடன் பரிசுகளை வழங்கினார்.

அதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “இந்தியாவில் ஆண்டுக்கு ரத்த தேவை பூர்த்தி செய்யப்படாத பட்சத்தில், வருடத்திற்கு 10 லட்சம் யூனிட் குறைபாடாக உள்ளது. உலகிலேயே அதிகமாக சாலை விபத்து நடைபெறும் நாடாக இந்தியாவும், அதிலும் குறிப்பாக தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. சென்னை மாநகரத்தில் தான் அதிகமான விபத்துகள் நடைபெறுகின்றன. இதற்கெல்லாம் 70 சதவீதம் முக்கிய காரணம் டாஸ்மாக் தான். மதுவிலக்கு துறை அமைச்சகம் தமிழகத்தில் பெயரளவுக்கு செயல்பட்டு வரும் நிலையில், மதுவின்றி இருக்க முடியாத நிலைக்கு இன்றைய இளைஞர்கள் தள்ளப்பட்டு உள்ளார்கள்.

anbumani ramadoss,india,youth ,அன்புமணி ராமதாஸ்,இந்தியா,இளைஞர்கள்

இதனை அடுத்து டாஸ்மார்க் விற்பனை இன்றைய தினம் அரசின் தொழிலாக மாறிவுள்ளது. நான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்று தமிழகத்திலிருந்து டெல்லிக்கு சென்ற போது அங்குள்ளவர்கள் என்னை ஒரு மாதிரியாக மிகவும் மோசமாக பார்த்தார்கள். எனக்கு என்னுடைய துறையைப் பற்றி அறியவே காலம் கடந்து கேள்வி நேரத்திற்கு பதில் தயார் செய்ய இரவு முழுவதும் தூங்காமல் இருப்பேன். எனது ப்ளஸ் டூ தேர்வுக்கு கூட நான் அப்படி என்னை இரவு முழுவதும் தூங்காமல் தயார் செய்தது கிடையாது. ஆனால் நாடாளுமன்ற பணிகளுக்காக எனது இரவு தூக்கம் தொலைந்து போனது. இன்றைய தினம் 108 ஆம்புலன்ஸ்க்கு யார்- யாரோ சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் நான் மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்தபோது எனக்கு அரசியல் பண்ண தெரியவில்லை. நான் ஒரு அதிகாரி போல செயல்பட்டு வேலை செய்தேன். அப்போது என்னையே நான் விளம்பரப் படுத்திக் கொள்ளவில்லை” என ஆதங்கத்துடன் அவர் பேசினார்.

Tags :
|