Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெயிலின் தாக்கம் உயர்ந்து வருவதால், மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகளை நடத்தி முடிக்க .. அன்புமணி வலியுறுத்தல்

வெயிலின் தாக்கம் உயர்ந்து வருவதால், மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகளை நடத்தி முடிக்க .. அன்புமணி வலியுறுத்தல்

By: vaithegi Thu, 30 Mar 2023 4:00:32 PM

வெயிலின் தாக்கம் உயர்ந்து வருவதால், மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகளை நடத்தி முடிக்க ..  அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டில் பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி விட்ட நிலையிலும், 1 முதல் 9 வரையிலான வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

தேர்வுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெயிலில் பள்ளிக்கு செல்ல முடியாமல் குழந்தைகள் வாடுகின்றனர். ஏப்ரல் 15-ம் நாளுக்குப் பிறகு தான் அவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். ஏப்ரல் கடைசி வாரத்தில் தான் அவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இது உண்மையாக இருக்குமானால், இதைவிட கொடுமையான மனித உரிமை மீறல் இருக்க முடியாது.

anbumani,the effect of the sun ,அன்புமணி ,வெயிலின் தாக்கம்

11, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் அடுத்த சில நாட்களில் நிறைவடைகின்றன. 10-ம் வகுப்புக்கு வரும் 6-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது. உயர்வகுப்புகளுக்கான பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு தேர்வு தொடங்கிய நிலையில் தொடக்கநிலை வகுப்புகளுக்கு தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏன்?

இதையடுத்து ஏப்ரல் இறுதி வரை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை. குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உடனடியாக தேர்வுகளை நடத்தி, ஏப்ரல் 2-ம் வாரத்திலிருந்து கோடை விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags :