- வீடு›
- செய்திகள்›
- மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் திட்டம் .. முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார்
மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் திட்டம் .. முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார்
By: vaithegi Tue, 25 July 2023 3:51:59 PM
சென்னை: தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தவும், உணவு உற்பத்தியை பெருக்கிடவும் 1 லட்சம் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு இலவச மின்சாரம் வழங்கியது.
இதையடுத்து முதல் ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்ட நிலையில் காத்திருப்பு பட்டியில் 50 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர்.
இந்த நிலையில் வருகிற 27- ஆம் தேதி திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் வேளாண் கண்காட்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார் .
இதனை அடுத்து அதில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
மேலும் அத்துடன் பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கும் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.
Tags :