கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குவைத்தில் 20 நாட்கள் ஊரடங்கு
By: Nagaraj Sat, 09 May 2020 2:46:12 PM
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வளைகுடா நாடான குவைத்-ல் 20 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்த வளைகுடா நாடுகளும் தப்பவில்லை. குவைத் நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது தொடர்பாக குவைத் அரசு செய்தி தொடர்பாளர் தாரிக் அல் மிஸ்ரிம் கூறியது, குவைத் நாட்டில் இதுவரை 7,205 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 47 பேர் பலியாகியுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 641 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. சமூக பரவலாக மாறுவதற்கு முன் நாடு முழுவதும் நாளை முதல் ( மே.10 ) மே. 30 வரை 20 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
20 days |
curfew |
enforced |