Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காரில் செம்மரக்கட்டைகள் கடத்திய 8 பேரை கைது செய்தது ஆந்திரா போலீஸ்

காரில் செம்மரக்கட்டைகள் கடத்திய 8 பேரை கைது செய்தது ஆந்திரா போலீஸ்

By: Nagaraj Sat, 10 June 2023 8:35:15 PM

காரில் செம்மரக்கட்டைகள் கடத்திய 8 பேரை கைது செய்தது ஆந்திரா போலீஸ்

திருப்பதி: காரில் செம்மரக்கட்டைகள் கடத்திய தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்பி பரமேஷ் ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் பாக்கிராபேட்டை போலீசார் பாக்கிராபேட்டை வனப்பகுதியில் உள்ள அனைத்து சாலைகளிலும் வாகன சோதனையை தீவிரப்படுத்தி அப்பகுதி வழியே வரக்கூடிய அனைத்து வாகனங்களிலும் சோதனை நடத்தினர்.

அப்போது அவ்வழியாக வந்த மூன்று கார்களை நிறுத்தி சோதனையிட்டபோது, காரில் செம்மரக்கட்டைகள் இருப்பது தெரிந்தது. பின்னர் காரில் பயணம் செய்த தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த 8 பேரை போலீசார் துரத்திப் பிடித்தனர்.

confiscation,rs.21 lakhs,sheep blocks,tirupati,value, ,செம்மரக்கட்டைகள், திருப்பதி, பறிமுதல், மதிப்பு, ரூ.21 லட்சம்

அவர்களிடம் இருந்து ரூ.21 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய 3 கார்கள், அரிவாள்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் திருப்பதி வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவது தெரியவந்தது.

செம்மரக்கடத்தலில் முக்கிய பிரமுகரான தமிழகத்தை சேர்ந்த பாண்டி மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாயுடு ஆகியோர் போலீசாரிடம் இருந்து தப்பினர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags :
|