Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தன்னாட்சி அங்கீகாரம் பெறும் கல்லூரிகளுக்கான புதிய விதிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

தன்னாட்சி அங்கீகாரம் பெறும் கல்லூரிகளுக்கான புதிய விதிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

By: vaithegi Wed, 05 July 2023 09:53:17 AM

தன்னாட்சி அங்கீகாரம் பெறும் கல்லூரிகளுக்கான புதிய விதிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு


சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 446 இணைப்பு கல்லூரிகள் இயங்கி கொண்டு வருகின்றன. இக்கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது, தன்னாட்சி கல்லூரிகளுக்கான விதிமுறைகளை கட்டமைப்பது உள்ளிட்டவற்றை அண்ணா பல்கலைக்கழகம் தான் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நடப்புக் கல்வியாண்டில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசனைகள் மேற்கொள்வதற்காக கடந்த (ஜூன்) 20-ம் தேதி அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நடந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதில் முக்கியமானதாக கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கு புதிய விதிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கிறது. மேலும் இதற்கு சிண்டிகேட் கூட்டத்திலும் ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது. அதாவது பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அதிகாரம் பெறுவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயம். இந்த நிலையில் அந்த கல்லூரிகளை கண்காணிக்க விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு இருக்கின்றன. இதையடுத்து அதன்படி, மாணவர்கள் சேர்க்கை, தேர்ச்சி சதவீதம், கல்வி பணியில் அனுபவம் கொண்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சி தொடர்பான உள்ளீடுகள் உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளன.

anna university,autonomy ,அண்ணா பல்கலைக்கழகம்,தன்னாட்சி

உதாரணமாக, இதற்கு முன்பு தன்னாட்சி அங்கீகாரம் பெறும் கல்லூரிகளில் இளங்கலை முதலாம் ஆண்டு படிப்பில் 60 சதவீதம் மாணவர் சேர்க்கை இருந்தாலே போதும். ஆனால் தற்போது அது 70 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று, விரிவுரையாளர்களின் சராசரி பணி அனுபவம் 5 ஆண்டுகளாவது இருக்க வேண்டும் எனவும், அனைத்து துறைகளிலும் ஆசிரியர்கள் - மாணவர்கள் விகிதம் 1:20 என்ற அடிப்படையில் இருக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து தன்னாட்சி அங்கீகாரம் பெறும் கல்லூரிகளில் நிதி, நிர்வாகக் குழு கூட்டப்படவேண்டும் என்பது உள்பட கூடுதல் விதிமுறைகளும் கொண்டுவரப்பட்டு உள்ளன. இதனை பின்பற்றாத கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் வகையிலும், இந்த விதிமுறைகளில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. தற்போது வரை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் 90 கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Tags :