Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா.. சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா.. சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்

By: vaithegi Thu, 21 July 2022 11:00:04 AM

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா.. சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவை சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக அரங்கில் வருகிற 29-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறுகையில், "அண்ணா பல்லைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் முதல் மதிப்பெண்கள் பெற்ற பல்வேறு துறைகளை சார்ந்த 69 மாணவர்களுக்கு 10 கிராம் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. இந்த 69 மாணவ-மாணவிகளுக்கும் பிரதமர் நரேந்திரமோடி பதக்கம் அணிவிக்கிறார்.

prime minister narendra modi,graduation ceremony ,பிரதமர் நரேந்திரமோடி,பட்டமளிப்பு விழா

மேலும் தங்கப்பதக்கம் பெறும் 69 பேரில் 31 மாணவ-மாணவிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாகங்களை சேர்ந்தவர்கள். 38 பேர் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் படித்தவர்கள். பட்டமளிப்பு விழாவில் நேரில் பங்கேற்க அனைத்து ஆராய்ச்சி மாணவர்களையும் ஜூன் 23-ந்தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டு உள்ளோம்" என்றார்.

இதற்கு முன்பு கடந்த 2021 மார்ச் 11-ந்தேதி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடந்தது. அப்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். இப்போது 29-ந்தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். இதையொட்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டு வருகின்றனர்.

Tags :