Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி அண்ணாமலை ட்வீட்

மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி அண்ணாமலை ட்வீட்

By: vaithegi Mon, 11 Sept 2023 1:16:34 PM

மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி அண்ணாமலை ட்வீட்

சென்னை:மகாகவி பாரதியாரின் நினைவு தினம் இன்று ... தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுளதாவது , கல்வி, தமிழ் மொழி, சமூக நீதி, பெண் விடுதலை, தேசியம் என்று அனைத்து துறைகளிலும் தனது எண்ணங்களாலும் எழுத்துக்களாலும் மாபெரும் புரட்சி செய்த மகாகவி பாரதியாரின் நினைவு தினம் இன்று.

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற பாரதியின் கனவு இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது.

annamalai,mahakavi ,அண்ணாமலை ,மகாகவி

மேலும் திருக்குறள் முதலான தமிழின் பெருமை மிகுந்த நூல்கள் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. உலகிற்கே பாரதம் குருவாக விளங்கும் என்ற அவரது கனவும் நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

இதையடுத்து வாழ்க்கை முறைகளையும், நன்னெறிகளையும், சுதந்திரப் போராட்டத்தையும் தன் எழுத்துக்களால் சுடர்விடச் செய்தவர்; தாய்மொழியையும், தாய்நாட்டையும் தம் உயிரெனக் கொண்டவர்; எம் மகாகவியின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம். என அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :