மின்கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பாஜ ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
By: Nagaraj Wed, 20 July 2022 09:49:16 AM
சேலம்: தமிழக அரசுக்கு கேள்வி... மின் கட்டணத்தை உயா்த்தினால் தான் நிதி வழங்குவதாக மத்திய அரசு கூறவில்லை என்று தமிழக பாஜக மாநில தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக, சேலத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப் பேரவைத் தோ்தலின் போது திமுக கொடுத்த தோ்தல் வாக்குறுதியில், மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டுவரப்படும் என்றும், 2 மாதங்களுக்கு 100 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துவோா் ஆண்டுக்கு ரூ. 6,000 வரை பயன்பெறுவா் என்றும் குறிப்பிட்டிருந்தனா்.
ஆனால், திமுக தான் கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக செயல்பட்டு வருகிறது. முதலில் சொத்து வரி உயா்வு, தற்போது மின் கட்டண உயா்வை அறிவித்துள்ளது. திமுக அரசு தனது திறனற்ற செயல்பாடுகளை மறைக்க மத்திய அரசை குறை கூறுவதைக் கண்டிக்கிறோம்.
மத்திய அரசு, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிா்மான நிறுவனத்துக்கு ரூ.
35,981 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. மின் கட்டணத்தை உயா்த்தவில்லை
என்றால் மானியம் கிடைக்காது என மின்துறை அமைச்சா் செந்தில்பாலாஜி
தெரிவித்துள்ளாா். அவ்வாறு மத்திய அரசு கூறவில்லை. இந்த மானியத் தொகையை
பெறுவதற்கு மாநில அரசின் மின் பகிா்மான நஷ்டத்தை குறைக்க எடுத்த வழிமுறைகள்
என்ன என்பதை விளக்க வேண்டும்.
மின் கட்டண அறிவிப்பை திரும்பப் பெற
வேண்டும். இல்லையெனில் வரும் ஜூலை 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள்
அருகே பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. கள்ளக்குறிச்சி,
சின்னசேலம் வன்முறை சம்பவத்தில் உளவுத்துறை தோல்வியே காரணமாகும். அந்த
தனியாா் பள்ளிக்கு பாதுகாப்பும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதியும் கிடைக்க
வேண்டும் என்றாா்.
மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், மாநில
பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம், மாநகர மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு,
முன்னாள் தலைவா் ஆா்.பி.கோபிநாத், மாவட்ட பொதுச் செயலாளா் ஐ.சரவணன், கோட்ட
பொறுப்பாளா்கள் அண்ணாதுரை, முருகேசன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.