- வீடு›
- செய்திகள்›
- விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அரசு உதவித்தொகை பற்றிய அறிவிப்பு வெளியீடு
விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அரசு உதவித்தொகை பற்றிய அறிவிப்பு வெளியீடு
By: vaithegi Tue, 29 Nov 2022 9:19:40 PM
சென்னை: உதவித்தொகை பற்றிய அறிவிப்பு .... ஒலிம்பிக், காமன்வெல்த் போன்ற உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கான போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு, பரிசுகளை வெல்ல வேண்டும் என தமிழக அரசு விளையாட்டு வீரர்கள் ஊக்கம் பெற பல உதவிகளையும் செய்து கொண்டு வருகிறது.
இதனைத்தவிர இது போன்ற போட்டிகளில் வென்று கோப்பைகளை கைப்பற்றுபவர்களுக்கு அரசு சார்பில் பல லட்சம் ரூபாய் பரிசாகவும், அரசு துறைகளில் பணி வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.
இதையடுத்து இந்த நிலையில், மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வென்ற தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை சிறப்பு உதவித்தொகை அளிக்க இருப்பதாக விளையாட்டு ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த சிறப்பு உதவித்தொகையினை பெற வீரர்கள், [email protected] என்ற இணையதளத்தில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.