கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு என அறிவிப்பு
By: Nagaraj Fri, 30 June 2023 11:09:12 PM
திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆலப்புழா, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டங்களில் 64.5 மில்லிமீட்டர் முதல் 115.5 மில்லிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :