Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் புதிதாக மாவட்டங்கள் உருவாக்கம் .. வெளியாக இருக்கும் அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக மாவட்டங்கள் உருவாக்கம் .. வெளியாக இருக்கும் அறிவிப்பு

By: vaithegi Wed, 29 Mar 2023 1:21:04 PM

தமிழகத்தில் புதிதாக மாவட்டங்கள் உருவாக்கம் ..  வெளியாக இருக்கும் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்களில், திண்டுக்கல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் நிலப்பரப்பில் பெரியதாகவுள்ளது.

அதனால் மேற்கண்ட மாவட்டங்களை பிரித்து தனியாக மாவட்டங்கள் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை ஒன்று எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி ஆகிய தொகுதிகளை வைத்து புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் எனவும், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளையும் பிரித்து புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் எனவும்அமைச்சர் சக்கரபாணி கோரிக்கை வைத்துள்ளார்.

districts,minister chakrapani ,மாவட்டங்கள் ,அமைச்சர் சக்கரபாணி

இதேபோல கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டும் புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு, பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒன்று அல்லது இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்குவது தொடர்பாக அறிவிப்பை வெளியிடுவார் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


Tags :