Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

By: Monisha Sat, 07 Nov 2020 10:51:37 AM

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி பயணம் செய்ய ஏதுவாக சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகை, காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு வருகிற 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதேபோல் திருச்சியில் இருந்து தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும், மதுரை, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

diwali festival,public,special bus,transport corporation,tamil nadu ,தீபாவளி பண்டிகை,பொதுமக்கள்,சிறப்பு பேருந்து,போக்குவரத்து கழகம்,தமிழ்நாடு

சென்னையில் இருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு ஆகிய பகுதிகளுக்கு தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்தும், கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந் தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகை, வேளாங் கண்ணி, மயிலாடுது, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய பகுதிகளுக்கு கோயம்பேடு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பஸ் நியைத்தில் இருந்தும் இயக்கப்பட உள்ளது.

தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல வருகிற 14, 15, 16, 17 ஆகிய நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|