Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவனந்தபுரம் - சென்னை இடையே கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு

திருவனந்தபுரம் - சென்னை இடையே கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு

By: vaithegi Thu, 20 Apr 2023 11:48:49 AM

திருவனந்தபுரம் - சென்னை இடையே கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக  அறிவிப்பு

சென்னை: சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “கோடை காலத்தில் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க திருவனந்தபுரத்திலிருந்து சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி திருவனந்தபுரம்-சென்னை சிறப்பு ரயில் (வண்டி எண் 06044) வருகிற மே மாதம் 3-ம் தேதி முதல் ஜூன் மாதம் 28-ந் தேதி வரை புதன்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது.

இதனை அடுத்து வருகிற 3-ம் தேதி இரவு 7.40 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து இந்த ரயில் புறப்பட்டு கொல்லம், செங்கனூர், கோட்டையம், எர்ணாகுளம் டவுன், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 6.52 மணிக்கு சேலம் வந்தடையும்.

summer special train,thiruvananthapuram,chennai ,கோடைக்கால சிறப்பு ரயில்,திருவனந்தபுரம் , சென்னை

அதன் பின் இங்கிருந்து 6.55 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக மதியம் 12.45 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்றடையும். இதேபோன்று மறு மார்க்கத்தில் சென்னை-திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (06043) மே மாதம் 4-ந் தேதி முதல் ஜூன் மாதம் 29-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

மேலும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 4ம் தேதி மதியம் 2.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 7.22 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 7.55 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக மறுநாள் காலை 6.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். ” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :