Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இரத்தினபுரியில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிப்பு

இரத்தினபுரியில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிப்பு

By: Nagaraj Sun, 27 Dec 2020 7:35:05 PM

இரத்தினபுரியில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிப்பு

தனிமைப்படுத்தப்பட்டன... இரத்தினபுரி மாவட்டத்தின் இரு பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பல பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

அதன்பிரகாரம் கொடகவெல மற்றும் எஹலியகொட ஆகிய பகுதிகளில் சில இடங்கள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொடகவெல பிரதேச சபைக்குட்பட்ட இறக்குவானை நகர், இறக்குவானை வடக்கு, இறக்குவானை தெற்கு, மசுமுல்ல, கொட்டலை ஆகிய பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், எஹலியகொட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மின்னான, விலேகொட, யகுதாகொட, அஷ்காகுல்ல வடக்கு, போபத்த ஆகிய பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளன.

colombo,early tomorrow morning,isolation,police units ,
கொழும்பு, நாளை அதிகாலை, தனிமைப்படுத்தல், பொலிஸ் பிரிவுகள்

கொரோனா தொற்று நோயாளிகள் அதிகளவில் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில இடங்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது. அதன்படி நாளை அதிகாலை 5 மணி முதல் டாம் வீதி, வாழைத்தோட்டம் மற்றும் மருதானை பொலிஸ் பிரிவுகளில் விதிக்கப்பட்ட தனிமைபடுத்தல் உத்தரவு நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கொழும்பு 2 இல் உள்ள வாகந்தை மற்றும் ஹுனுபிட்டிய பகுதிகளும் விடுவிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்தோடு வெள்ளவத்தையில் மயூரா பிளேஸ் மற்றும் ஹல்கவத்தை, பொரளையில் Kalipullawatte, Laksanda Sevana ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றன.

Tags :